நாட்ராயன் நாச்சிமுத்து


மாந்தரஞ்சேரல் காலத்துத் தொன்மையான ஶ்ரீ நாட்டராயன் நாச்சிமுத்து சாமிகள்

(இண்டியா சர்க்காரால் இடித்து அகற்றப்பட்டது)

மாந்தபுரம் நாட்டரயன் தலபுராணம்:



(அ)ரம்பையாகிய மாயன் 
(இண்டியா சர்க்காரால் இடிக்கப்பட்ட மாந்தரஞ்சேரல் காலச்சிலை)


தன் கை யார் தலையில் பட்டாலும், அவர் பஸ்மமாக ஈசனிடம் வரம் பெற்ற பஸ்மாசுரன், அவர் தலையிலேயே கைவைக்கப் பாய்ந்தான். பஸ்மாசுரனிடமிருந்து சிவன் மறைந்து ஐவிரலிச்செடிப் பழமாக, அதனை அவன் ஆட்டுருக்கொண்டு மேய வந்தான்.

மாயன் (அ)ரம்பை (மோகினி) அவதாரமானார். அவனை மயக்கித் தன்னுடன் சேர வேண்டுமாயின், நீராடி வரச்சொன்னார். அவனும் அருகில் நீர் இன்மையால் தவிக்க, கோமியம் சிறிது எடுத்துத் தலையில் வைக்கக் கூறினாள் (அ)ரம்பை. அவனும் வரத்தினை மறந்து கோமியத்தைத் தலையில் வைக்கத் தொட, பஸ்மடானான். ஈசனை, (அ)ரம்பையான மாயன் ஐவிரலிப் பழத்திலிருந்து வெளியில் அழைக்க, அவரும் மாயனின் (அ)ரம்பையின் வடிவுகண்டு மையல்கொண்டு தனது சுக்கிலத்தின் மூன்று துளிகளை விட, மாயனால் அவை ஐயன், நாச்சிமுத்து, கூடலூர் உள்ள அருங்கரை அம்மன் என்று மூன்றாகின. மலையாளம் (கொல்லிமலை) வாழ்ந்த பூதமான முனி, நரமாமிசம் புடைத்துண்டு வந்ததனை அடக்கித் தனக்கு கணமாக்கிக்கொண்டார் நாட்டராயன். 

கோயில் கட்டிய மாந்தரஞ்சேரல்:

சேரன் நாடாகிய கொங்கதேசத்தில் களப்பிரரை விரட்ட 108000 வேட்டுவர் சேரனால் அமர்த்தப்பட்டனர். இவர்கள் கூன் பாண்டியன், திருஞானசம்பந்தர் காலத்தில (circa 600 CE) நொய்யலுக்கு வடக்கில் ஏற்கனவே நற்குடி 48,000, பசுங்குடி 12,000 ஆதொண்டன் காலத்தில் வந்தோருக்குத் துணையாய் வடக்குத்தலைவாசல் ஆறு நாடுகளைப் பூர்வீகமாகக் அமர்த்தப்பட்டுச் சேரனது பெருந்தாலி, குல குருக்கள், நாட்டு அருமைச்சீர்கள், மங்கல வாழ்த்து, வீரமாத்தி (வீரமகாசதி, கைம்மை நோன்பு) ஆகியவை பெற்ற பெருந்தாலி பெற்ற கொங்க வேட்டுவர் (Vettuva Gounder MBC பிரிவு): https://kongukulagurus.blogspot.com/2009/09/52_1.html 

பின்னர் பாண்டியர் தனியாக அழைத்துவந்த வடுக வேடுவரான பூவிலுவர் (பூலுவக்கவுண்டர் - Pooluva Gounder BC), காவிலுவர் (மங்கிலியம் அணியாப் பட்டாலி வேட்டுவர் - Vettuva Gounder MBC பிரிவு) , மாவிலுவர் (வலையர் பிரிவு - Mutharaiyar MBC ) ஆகியோர் சேரரது கடைசிக்காலங்களில் (circa 800 CE) தெற்கு, மேற்கு, கிழக்குத்தலைவாசல் ஆறுநாடுகளில் அமர்த்தப்பட்டனர்: https://kongupattakarars.blogspot.com/2011/03/blog-post_2781.html

சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தின் இறுதியில் (circa 850) வேடர் (Vettuva Gounder DNC) கிழக்குத்தலைவாசல் ஆறுநாடுகளில் செட்டி சிவபிராமணர்களால் பாண்டியர் ஆதரவில் அமர்த்தப்பட்டனர்.

நமது சேர மன்னரான மாந்தரஞ்சேரல் ரிஷபகிரிச் சோழன் மகளை மணந்தபோது, சீதனமாக சோழன் நற்குடி 8000 வெள்ளாளர்களயும், 500 செட்டிமாரையும் சேரனுக்கு அளித்தான். சேரன் தாராபுரமாகிய விலாடபுரி சூழ் தெற்குத் தலைவாசல ஆறுநாடுகளில் நற்குடி 8000 வெள்ளாளரையும், செட்டிமாரையும் குடியமர்த்தி மந்திரி, பிரதானி (பட்டக்காரர்கள் எஜமானர்), காணியாளர் (கவுண்டர்) போன்றவற்றை வழங்க, பாண்டியரின் காவிலுவ வேட்டுவருக்கும் (மங்கிலியமில்லா பட்டாலி வேட்டுவர்) மாந்தரஞ்சேரலுக்கும் பிணக்கு ஏற்பட்டது.

பாண்டியன் காவிலுவருக்குத்துணையாக படையெடுத்துவர, சேரன் அயிரை மலை (ஐவர் மலை) அருகே ஒரு போர்க்களத்தில் அவர்களை வீழ்த்தி, பொதினி (பழனி) வரை அவர்கள் தோற்றோடச்செய்தான்.

அதன்பின், தன்னாட்டில் நடுநிலமான காங்கய நாட்டு வள்ளியறச்சல் காணியில், மாந்தபுரம் என்று தனது பெயரால் ஒரு நகர் அமைத்து, அங்குள்ள சாத்தனாகிய ஐயன் பிறந்த ஊஞ்ச வனத்தில் மந்திரமுறைமையினால் யந்திர சாதனம் போடுவித்து, ஐயன், சாத்தன் (சமஸ்: ஶாஸ்தா) (ஐயன்,ஐயனார்,ஐயப்பன்,ஐயநாயக,ஆரியன்) ஒரு கோயில் அமைத்தார். அதனில் பூதம் (முனி) ஒன்றையும் ஆவாகனித்தார்: (கொல்லிமலையின் மலையாள முனி).



ஶ்ரீ பெண் முனி

இண்டியன் சாக்கிய பௌத்த சூனியவாதமான அசோகச் சக்கர சர்க்காரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட தொல்பொருள் சின்னமான மாந்தபுரம் மாந்தரஞ்சேரலது நாட்டராயன் நாச்சிமுத்து ஐயன் கோயில்

தனது நாட்டில் பிறந்து அதனை ஆள்பவன் ஐயன் என்பதால் நாட்டு+ராயன் நாட்டராயன் என்றும், தமிழில் நாட்டரையன் என்றும் இக்கடவுள் பெயர் விளங்கிவருகிறது. இந்நிகழ்ச்சியினைக் கூறுவதே மாந்தரஞ்சேரல் மெய்க்கீர்த்தியாகும்:












மாந்தரஞ்சேரல் பெயரில் மாந்தபுரத்திலேயே மாந்தீஶ்வரர் என்ற இஶ்வரன் கோயில் உள்ளது. அம்மன் இல்லாததால் இது மன்னனது பள்ளிப்படையாகவும் இருக்கலாம். வள்ளியறச்சல், கண்ணபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மாந்தீஶ்ரர்கள் உள்ளன. 

2000க்குப்பிறகு சேரனது யந்திர, மந்திரப்பிரதிஷ்டையை இண்டியா சர்க்காரது டமில்நாடு சர்க்காரது ஹிண்டூ ரிலிஜியஸ் ஏண்ட் சேரிடப்ல் எண்டோமண்ட்ஸ் கோயில் அழிப்புப் பிரிவு, இத்தொன்மைக் கோயிலை, எமது W.P 574/2015 ஜட்ஜ்மென்டுகளையும் மீறி இடித்துத் தரைமட்டமாக்கியது. அதன்மேல் முற்றிலும் ஸ்தானபேதமாக ஆகமங்களை மீறி புதிதாக ஒரு கட்டடத்தைப் பெரிய வசூல்வேட்டை போட்டுக் கட்டியுள்ளது. இதற்குத்துணைபோன உள்ளூரார் சிலரும் அதற்குள் பரிதாபகரமாக மாண்டனர். தற்போது மாந்தீஶ்வரருக்கும் அதே நிலை.








இண்டியன் சாக்கிய பௌத்த சூனியவாதமான அசோகச் சக்கர சர்க்காரால் 2024இல் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட தொல்பொருள் சின்னமான மாந்தபுரம் மாந்தரஞ்சேரலது மாந்தீஶ்வரர் கோயில்

Comments